Monday, December 28, 2009

மறுபடியும் சிவாஜி


('சிவாஜி' படத்துல சூப்பர் ஸ்டார் ஆதி-ய இன்கம் டாக்ஸ் டிபார்ட்மென்ட் கிட்ட போட்டு கொடுத்துட்டு, ஸ்டைலா பேசுவார் இல்ல, அந்த ஸ்டைல்லே இத படிங்க):

"என்னங்க விஜய், இப்படி ஆயிடுச்சு! வேட்டைகாரனையும் அடாவடியா விளம்பரம் பண்ணி அநியாயமா Flop ஆக்கிடானுங்களே.....
படுபாவி பசங்க.... இப்பிடி பண்ணிடானுங்களே.... இப்ப என்ன பண்ண போறீங்க?

SunFeast Biscuit Ad-லே நடிக்க போறீங்களா? இல்ல, Coke Ad தேடி போயி அவங்கள கெஞ்ச போறீங்களா? இல்ல, கலைஞர் TV-ய காக்கா புடிப்பீங்களா?

நான் வேணா ஷங்கர் அல்லது மணிரத்தினம் கிட்ட சொல்லி ஏதாவது சான்ஸ் வாங்கி தரட்டுமா?
அய்யய்யோ.... அதுக்கு எல்லாம் நடிக்க தெரியணுமே.

சரி. உங்களுக்கு தெரிஞ்ச வேலை ஒன்னு இருக்கு.
நோகாம நோம்பு கும்புடுற வேல. நானே ஆரம்பிச்சு வெக்கறேன்.

கைய நீட்டுங்க...

இந்தாங்க Mahesh Babu படத்தோட DVD. இத remake பண்ணி பொழச்சுக்கோங்க.

வர்ட்டா...

(Adapted from a similar post by a Rajini fan (reelpotti.blogspot.com) when ATM became a flop).

Thursday, December 17, 2009

SECULARISM - Indian Style


I got this in email but how truly it reflects the reality in India (!).


If You Cross The North Korean Border Illegally, You Get 12 Years Hard Labor.

If You Cross The Iranian Border Illegally, You Are Detained Indefinitely.

If You Cross The Afghan Border Illegally, You Get Shot.

If You Cross The Saudi Arabian Border Illegally, You Will Be Jailed.

If You Cross The Chinese Border Illegally, You May Never Be Heard From Again.

If You Cross The Venezuelan Border Illegally, You Will Be Branded A Spy And Your Fate Will Be Sealed.

If You Cross The Cuban Border Illegally, You Will Be Thrown Into Political Prison To Rot.

If You Enter Britain Illegally, You Will Be Arrested, Prosecuted And Sent To Prison And Deported.

If You Are A Muslim And Illegally Cross The INDIAN Border, You Get

- A Ration Card,
- A Drivers License,
- Voter Identity Card,
- Passport ( 1 or more),
- Credit Cards,
- Haj Subsidy,
- Job/Job Reservation,
- Special Privileges,
- Subsidized Rent Or A Loan To Buy A House,
- Free Education,
- Free Health Care,
- A Lobbyist In New Delhi,
AND
- Voting Rights!!!

Saturday, December 12, 2009

ரஜினி 60



றுபதாம் ஆண்டில் அடி எடுத்து வைப்பவரே!
தர்ச நாயகனாய் அனைவர்க்கும் ஆனவரே!!

ளசுகளின் மனசிலே ஈசியாய் இடம் பிடிப்பவரே!
ஓட்டும் திரை அரங்கம் இல்லாமல் செய்பவரே!!

லகவாழ் ரசிகர்களின் உண்மையான நாயகரே!
ருக்கு உபதேசிக்காமல் உண்மையாய் வாழ்பவரே!!

ல்லோரையும் எந்நாளும் மகிழ்ச்சியுற வைப்பவரே!
ணிபோல் முன்வந்து எளியோரை மேலேற்றுபவரே!!

ந்துகோடி வாக்குகளை அள்ளப் பிறந்தவரே!
ருநாளும் உனைமறவாத ரசிகர்களை பெற்றவரே!!
ய்வுக்கே ஒய்வு கொடுத்து ஓடியாடி உழைப்பவரே!!!

ள்ளமில்லா உள்ளத்துடன் குழந்தைபோல் சிரிப்பவரே!
லனமிலா உறுதியுடன் பல தடைகள் கடந்தவரே!!

ஞானமெனும் ஜோதியினை நாள்தோறும் தேடுபவரே!
தான் என்னும் தலைகனத்தை தள்ளியே வைத்திருப்பவரே!!

நாட்டிலுள்ள நல்லோரின் நம்பிக்கை நட்சத்திரமே!
பாராளும் வாய்ப்புதனை பதறாமல் மறுத்தவரே!!

ருத்துவரின் மனத்திமிரை மறுதலித்து மன்னித்தவரே!
யாகாவாராயினும் நா காக்கும் பண்புள்ளவரே!!

ராஜரிஷியாக தகுதியுள்ள இந்தியரே!
ரவேண்டும் நீர் எமை ஆள இப்போதாவது!!

சஷ்டியப்தபூர்த்தி காணும் சந்தோஷ தருணத்தில்,
கஷ்ட வாழ்க்கை வாழும் பலகோடி மக்களுக்கு,
இஷ்ட தெய்வமாக திகழும் இருபத்தி ஓராம் நூற்றாண்டு காந்தியே!

நடிப்பே உமக்கு நாட்டமா? நன்று நன்று;
இமய மலையே உன் மன ஓட்டமா? அதுவும் நன்று;
பொது சேவையே உன் தேவையா? ஆஹா மிகவும் நன்று.

எந்திரன் படம் முடித்து, எது உம் முடிவென்று
எல்லோரையும் கூட்டி, எடுத்துரைக்க வேண்டுகிறோம்;

எது உன் விருப்பமோ, அதுவே எம் விருப்பமும்;
அது எதுவாக இருப்பினும், பொது நன்மையே அதில் பிரதிபலிக்கும்;

தீர்க்கமாக யோசித்து, திண்ணமாக தெரிவிப்பாய்;
சன்மார்க்கமாக நாங்கள், சத்தியமாய் ஒத்துழைப்போம்.

அலர்ஜி கவிஞன் அருணாசலம்

Tuesday, December 1, 2009

ரஜினி படபிடிப்பால் மக்களுக்கு விளைந்த நன்மை


நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள். நாரதராவது, வேண்டுமென்றே கலகம் செய்து, அதனால் பிற்பாடு நன்மை விளைய காரணமாக இருந்தார். ஆனால், தன்னால் பொது மக்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ தீங்கோ, நஷ்டமோ ஏற்பட கூடாது என்று சிந்திக்கும் ரஜினியை போன்ற ஒரு நல்ல மனிதரின் படபிடிப்பினால், தமிழக மக்களுக்கு, குறிப்பாக சென்னை வாசிகளுக்கு, இப்போது ஒரு நன்மை விளைந்திருக்கிறது.

கடந்த ஞாயிற்றுகிழமை காலை 6 மணி முதல் காலை சுமார் 10 மணி வரை, சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் ரஜினி நடித்து, ஷங்கர் இயக்கும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பான 'எந்திரன்' திரைபடத்தின் சண்டைகாட்சி படபிடிப்பு நடைபெற்றது. அரசாங்க விதிகளின்படி, முறையான அனுமதியுடனேயே இந்த படபிடிப்பு, அதுவும் விடுமுறை நாளான ஞாயிற்று கிழமை காலை வேளையில் பீக் அவர் தொடங்குவதற்கு முன்பே நடைபெற்று முடிந்தது.

ஆனால், ஊடகங்களில் இந்த படபிடிப்பை பற்றி வேண்டுமென்றே தாறுமாறாக செய்தி வெளியிட்டு, எப்படியாவது ரஜினியின் பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காகவே, இல்லாததையும் பொல்லாததையும், மற்றும் நடக்காததையும் நடந்ததுபோல் திரித்து வெளியிட்டு தங்களுக்கு திரையுலகத்தின் மேலிருந்த காட்டத்தை ஊடகங்கள் இவ்வாறு செய்தி வெளியிட்டு, தங்களின் வெறுப்பை காட்டி உள்ளன. ஒன்று விடாமல் அத்தனை செய்தி ஊடகங்களிலும், குறிப்பாக, தமிழ் செய்தி, மேலும் குறிப்பாக, வலை உலக செய்தி ஊடகங்கள் தங்களின் வெறுப்பை இந்த முறையில் காட்டி தங்களின் 'ஈகோ'வை நன்றாக சொறிந்துகொண்டு உள்ளன. "8 மணி நேரம் கத்திப்பாரா மேம்பாலத்தில் ட்ராபிக் ஜாம்" என்று பச்சை பொய்யை, கொஞ்சம் கூட கூச்சமின்றி அத்தனை பொய் பத்திரிகை காரர்களும் எழுதி ரஜினிக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படுத்த முயன்றுள்ளனர்.

இந்த படப்பிடிப்பு நடந்த அடுத்த நாளே, தமிழக அரசாங்கம் பொது இடங்களில் படபிடிப்பு நடத்துவதற்கு உடனடியாக தடை விதித்து ஆணை பிறப்பித்து விட்டது. இந்த தடை உடனடியாக அமுலுக்கு வருகிறது. இனிமேல் எந்த படபிடிப்பும் போக்குவரத்து அதிகமுள்ள கத்திப்பாரா போன்ற பொது இடங்களில் நடைபெற அரசாங்கம் அனுமதிக்காது. பொது மக்களுக்கு இதனால் நிம்மதி. போக்குவரத்திற்கு இடைஞ்சல் இன்றி அவர்கள் நிம்மதியாக பயணிக்கலாம்.

உண்மையாக நடந்தது என்ன? உண்மையில் 'எந்திரன்' படபிடிப்பு நடந்தது என்னவோ விடிகாலை 6 மணி முதல் காலை 9 : 30 மணி வரைதான். ரஜினியும் தன்னுடைய காட்சிகளை நடித்து கொடுத்துவிட்டு சுமார் 9 : 30 மணி அளவில் அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார். ஒரு விடுமுறை நாள் அன்று, அதுவும் பீக் அவர் ஆரம்பிக்கும் முன்பே, படபிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டு இருந்தாலும், பொய் பத்திரிகைகள் மிகைபடுத்தி 8 மணி நேரம் பொது மக்கள் அவதி என்று எழுதியது இந்த பத்திரிகைகளின் உண்மையான நோக்கம் வேறு எதுவோ என்று சந்தேகப்பட வைக்கிறது. படப்பிடிப்பு நடந்த அந்த 3 அல்லது 4 மணி நேரத்திற்குள் 'ரஜினி'யை பார்ப்பதற்கு கூடிய மக்கள் கூட்டத்தாலும், டூ வீலர்கள் நிறுத்தியதாலும் போக்குவரத்திற்கு சிறிது பாதிப்பு நேர்ந்து இருக்கலாம். போலிசும் மெத்தனமாக இருந்து இருக்கலாம். அதற்காக இதுதான் சாக்கு என்று ரஜினியை இதில் போட்டு தாக்குவது இந்த பொய்யர்களின் உண்மையான நோக்கம் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறது.

இந்த பொய்யர்களுக்கு உண்மையிலேயே மக்கள் மீதும், அவர்கள் படும் சாலை அவதிகள் மீதும் அக்கறை இருந்து இருந்தால் அவர்கள் என்ன செய்து இருக்க வேண்டும்? இந்த மாதிரி, மக்கள் பயன்படுத்தும் முக்கியமான சாலைகளில் அரசாங்கம் படபிடிப்பு நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது என்று எழுதி மக்கள் கருத்தை அதற்க்கு ஆதரவாக உருவாக்க வேண்டும். அதை விடுத்து, இதோ ரஜினியை போட்டு தாக்குவதற்கு இன்னொரு சாக்கு கிடைத்தது என்று பொய் செய்தி போட்டு அவரின் பெயருக்கு களங்கம் கற்பிக்க முயல்வது இந்த பொய்யர்களின் நோக்கத்தையே சந்தேகிக்க வைக்கின்றது.

சரி, இதற்குமுன் கத்திப்பாரா பகுதியில் படபிடிப்பே நடக்க வில்லையா இல்லை சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் படபிடிப்பே நடக்க வில்லையா என்ன? எவ்வளவோ படபிடிப்பு நடத்தப்பட்டு உள்ளது. மக்களும் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஆனால், இதுவரை அதை பற்றி எவருக்கும் அக்கறையோ அல்லது இந்த மாதிரி அரசாங்கமே போக்குவரத்தை பாதிக்கும் வகையில் படபிடிப்புகளுக்கு அனுமதி கொடுக்கலாமா என்று எவரும் கேட்டதோ அதற்காக ஒரு துரும்பை கூட கிள்ளி போட்டதோ கிடையாது.

ஆனால், ரஜினி என்கிற மக்கள் செல்வாக்கு உள்ள மாமனிதன் பங்கு கொண்ட படபிடிப்பு கத்திப்பாரா மேம்பாலத்தில் நடைபெற்ற அடுத்த நாளே அரசாங்கம் விழிப்பு உணர்வு பெற்று தன்னுடைய தவறான அரசாணையை வாபஸ் பெற்றுக்கொண்டு போக்குவரத்து நெரிசல் மிக்க பொது சாலைகளிலும் மேம்பாலங்களிலும் படபிடிப்பு நடத்துவதற்கு உடனடி தடையை விதிக்கின்றது என்றால், பொது மக்கள் உண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும். ரஜினி நடிக்காமல், வேறு உன்னை போலவோ, என்னை போலவோ ஒருவன் நடித்திருந்தால், எந்த நாயாவது அந்த படபிடிப்பை சீந்தி இருக்குமா? அதனால் இவ்வளவு பரபரப்பு ஏற்ப்பட்டு இருக்குமா? அரசாங்கம் தான் தன்னுடைய நித்திரையில் இருந்து விழித்திருக்குமா? எனவே, சென்னை வாசிகள் ரஜினிக்கு நிச்சயம் நன்றி கூற கடமை பட்டிருக்கிறார்கள்.

கத்திப்பாரா மேம்பால படபிடிப்பு யாருடைய யோசனையாக இருக்க முடியும்?

நிச்சயம் ரஜினியாக இருக்க முடியாது. அவர் "ஏன் இங்கே படபிடிப்பு வைத்துக்கொள்கிறீர்கள்? என்னை பார்க்க மக்கள் கூட்டம் கூடி விடுவார்களே? அதனால் போக்குவரத்திற்கு இடைஞ்சல் இருக்குமே" என்று நிச்சயம் கேட்டிருப்பார். 1990 களில் ஜெயலலிதா ஆட்சியின்போது, ரஜினி சொல்லியும் கேட்காமல், அவரது காரை பொதுமக்களின் கூட்டத்தோடு கூட்டமாக ஜே. வின் கார் போவதற்காக காத்திருக்க வைத்த போலீஸ் பட்ட அவஸ்தையை யார் மறந்திருக்க முடியும்? எனவே, ரஜினியின் ஆட்சேபனையையும் மீறித்தான், கத்திப்பாரா மேம்பால படபிடிப்பு முடிவு செய்ய பட்டிருக்க வேண்டும்.

இயக்குனர் ஷங்கர் இந்த விஷயத்தில் மிகவும் தெளிவானவர். அந்நியன் படத்திற்கே, சென்னையில் எந்த மேம்பாலத்திற்கும் அனுமதி கிடைக்காமல், பாண்டிக்கு சென்று "அம்பி மொபெடில் வரும் காட்சியை" படமாக்கியதை சில நேர்காணல்களில் கூறியுள்ளார். எனவே, அவரும் கத்திப்பாரா மேம்பாலத்தை முடிவு செய்திருக்க வாய்ப்பில்லை.

எஞ்சி இருப்பது 'எந்திரன்' படத்தை பாதியில் வாங்கி, இப்போது தயாரித்துக்கொண்டு இருக்கும் சன் குழுமம் தான். நம் அனைவருக்குமே தெரியும் இவர்கள் எவ்வளவு பண, அரசியல் மற்றும் அதிகார செல்வாக்கு பெற்றவர்கள் மற்றும் அதனை உபயோகப்படுத்த துளிகூட தயங்க மாட்டார்கள் என்பது. தயாரிப்பு செலவை மட்டு படுத்துகிறேன் பேர்வழி என்று ஏற்கெனவே ஷங்கர் உபயோகிக்கவிருந்த சில, பல ஹாலிவுட் மற்றும் ஹாங்காங் தொழில்நுட்ப கலைஞர்களை கழட்டி விட்டவர்கள் இந்த சன் பிக்சர்ஸ். வெளிநாட்டு படபிடிப்புக்கும் தடா போட்டு விட்டவர்கள் இவர்கள். எனவேதான் இந்த மேம்பால சண்டை காட்சிகளையும் ஷங்கர் இந்தியாவிலேயே அதுவும் சென்னையிலேயே எடுக்க வேண்டிய கட்டாயம். ஆட்சியாளர்களுடன் தங்களுக்குள்ள நெருக்கத்தை பயன்படுத்திக் கொண்டு, சன் பிக்சர்ஸ் தான், சில வாரங்களுக்கு முன்பாக மதுரவாயல் மேம்பாலத்தையும், இப்போது கத்திப்பாரா மேம்பாலத்தையும், 'எந்திரன்' படபிடிப்புக்காக பயன்படுத்திக்கொள்ள உத்தரவு பெற்றிருக்க வேண்டும். போலிசும், சர்வ வல்லமை பொருந்திய சன் உரிமையாளர்களுக்கு பயந்துகொண்டு போக்குவரத்தை நிறுத்தி இருக்க வேண்டும்.

'எந்திரன்' தயாரிப்பாளர்களுக்கு வேண்டியது பண செலவு அதிகம் இல்லாமல் படம் தயாரிக்க வேண்டும். அப்படி செய்கையில், இதனால் பொது மக்களிடம் வருகிற கோபத்திற்கு ஆளாக போவது என்னவோ 'ரஜினி' என்கிற ஒரு மனிதன். எனவே, சன் ஐ பொறுத்தவரை, சிக்கனத்திற்கு சிக்கனம். கெட்ட பெயர் என்னவோ ரஜினிக்கு; அவர்களுக்கு இல்லை.

ரஜினி ரசிகர்கள் இத்தகைய செய்திகளினால் எல்லாம் துவண்டு விட கூடாது. பாபா பட வெளிஈட்டின்போதோ அல்லது குசேலன் பட வெளிஈட்டின்போதோ நாம் பார்க்காத ஊடக வெறியாட்டமா? ரஜினி என்கிற தனி மனிதனின், என்றும் அழியாத மக்கள் செல்வாக்கை கொஞ்சம் கூட பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல் பிடித்த ஈனபயல்களின் பொய் பிரச்சாரத்திற்கு ரசிகர்கள் யாரும் மறுபடியும் பலியாககூடாது.

ரஜினி என்னும் மனிதர், "பொது மக்களுக்கு முடிந்தால் நன்மை செய்ய வேண்டும்; இல்லாவிடின் அவர்களின் துன்பத்தையாவது மேலும் பெரிதாக்காமல் இருக்க வேண்டும்" என்று அல்லும் பகலும் சிந்திக்கும் நல்ல உள்ளம் கொண்டவர். எனவே, அவர் நிச்சயம் மக்களுக்கு போக்குவரத்து தொல்லை நேராது என்று உறுதி செய்துகொண்ட பிறகே இந்த படபிடிப்புக்கு சம்மதம் தெரிவித்திருப்பார். அதன் வெளிப்பாடுதான், படப்பிடிப்பு நடை பெற்றது ஒரு விடுமுறை தினம்; நடந்த நேரம், மக்கள் கூட்டம் வருவதற்கு முந்தைய காலை நேரம். 10 மணிக்குள் படபிடிப்பு நடந்து மேம்பாலம் மக்களின் முழு உபயோகத்திற்கு வந்து விட்டது. உண்மை இவ்வாறாக இருப்பினும், ஊடகங்கள் 'காண்டு' பிடித்து செய்தி வெளியிட்டு இல்லாத ஒன்றை, ஊதி பெரிதாக்கி 'பெரிய பிரச்னை' போல் தோற்றம் கொடுத்து விட்டன. இருப்பினும், அனைத்தும் இனிதே முடிவதுபோல், அரசாங்கமும், இத்தகைய படபிடிப்புகளுக்கு இனிமேல் அனுமதி இல்லை என்று அறிவித்து மக்களை நிம்மதி பெருமூச்சு விட செய்து விட்டது.

இப்போது மீண்டும் படியுங்கள் முதல் பேராவின் முதல் வாசகத்தை.

Tuesday, November 10, 2009

பரோலில் தொலைந்த நீதி


டெல்லி திஹர் சிறையிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் பரோலில் இரண்டு மாதம் நீதி மன்ற அனுமதியுடன் தன்னுடைய உடல் நிலை சரியில்லாத தாயை பார்க்க வெளியே வந்தார் 'மனு ஷர்மா' என்ற குற்றவாளி. இவர் ஜெச்சிக்கா லால் என்ற பெண்ணை கொன்ற குற்றத்திற்காக டெல்லி உயர் நீதி மன்றத்தினால் சிறையில் அடைக்கப்பட்டவர். காங்கிரஸ் பிரமுகர் மற்றும் கட்சி தொடர்பு இப்பொழுதும் நிறைய உண்டு இவருக்கு. இப்பொழுதும் டெல்லியை ஆண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் அரசின் ஒப்புதலுடனேயே வெளியே வர அனுமதி கிடைத்திருக்கிறது.

ஆனால், வெளியே வந்த மனு ஷர்மா, தன் தாய் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறப்ப்படும் சண்டிகர் நகரிலிருந்து நீதிமன்ற அனுமதி இல்லாமலேயே டெல்லியில் உள்ள ஒரு நைட் கிளப் ஒன்றில் கடந்த சனிக்கிழமை இரவு இருந்ததாக செய்திகள் வந்து இது மிக பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதில இன்னொரு திருப்பம் என்னவென்றால், எந்த தாய் உடல் நிலை சரி இல்லை என்று கூறி வெளியே வந்தாரோ அந்த அவருடைய தாயே கடந்த வாரம் சண்டிகர் நகரில் பத்திரிக்கை சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டதுதான். இப்போது பொய் சொல்லி சிறைக்கு வெளியே வந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சூட்டப்பட்டுள்ளது.

இந்த களேபரத்தின் சூடு தாங்க முடியாமல் டெல்லியை ஆளும் காங்கிரஸ் அரசு தனது போலிசை விட்டு மனு ஷர்மா டெல்லி நைட் கிளப்புக்கு வந்தாரா என்று ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு இட்டுள்ளது. இதற்க்கு இடையில், நல்ல பிள்ளை போல், நைசாக திஹர் சிறைக்கு சென்று தன்னை ஒப்படைத்துக்கொண்டுள்ளார் மனு ஷர்மா. அவரது பரோல் முடிய இம்மாதம் 22 ம் தேதி வரை நேரம் இருந்தும், தன்னுடைய குட்டு வெளிப்பட்டு விட்டதால் ஒரு சின்ன பிராயச்சித்தம் போல, 12 நாட்கள் முன்னாலேயே தன்னுடைய பரோலை முடித்துக்கொண்டு விட்டார். இந்த களேபரம் அனைத்திலும் டெல்லி முதல் மந்திரி ஷீலா தீக்ஷித்தின் தலைதான் உருண்டு கொண்டு இருக்கிறது.

ஷீலா தீக்ஷித் என்னதான் நல்ல ஆட்சி செய்தாலும், அவருக்கு கருணாநிதி போல சாமர்த்தியம் கொஞ்சமும் இல்லை என்றே தோன்றுகிறது. இதுவே கருணாநிதி அவர் இடத்தில் இருந்திருந்தால், பரோலாவது ஒன்றாவது. கடந்த அக்டோபர் மாதம் 31 ம் தேதி அன்னை இந்திராவின் நினைவு நாளை சாக்காக வைத்து, மனு ஷர்மாவை மன்னித்து சிறையிலிருந்து முழு விடுதலை அளித்திருக்க மாட்டாரா என்ன? எதற்கு தேவை இல்லாத பரோல் மற்றும் அதன் கட்டுப்பாடான விதிகள்? முதல்வர்தானே நீதி பரிபாலனம் செய்ய வேண்டும்?

வெறும் கொலை தானே செய்திருக்கிறார் மனு ஷர்மா? மன்னிப்பது முதல்வரின் குணம். மன்னிக்கப்படுவது குற்றவாளிகளின் பாக்கியம். இவர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு நசுங்குவது நாட்டின் நீதி பரிபாலனமும், பொது மக்களும்தான்.

Wednesday, September 16, 2009

சங்கிலி தொடர்

நண்பர் துபாய் கோபி (ஜோக்கிரி) அவர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு இந்த சங்கிலி தொடர் கேள்விகளுக்கு எனக்கு தோன்றிய பதில்களை அளித்துள்ளேன் இதனை தொடர விருப்பம் உள்ளவர்கள் தாங்களாகவே இதனை தொடரலாம்.


காதல் மனிதனுக்கு அவசியமா?

இல்லை.


அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?

அது பார்ப்பவர் கண்களில் உள்ளது. ஒருவருக்கு அழகாக தோன்றுவது மற்றவருக்கு தோன்றாமல் போகலாம். அதேபோல், ஒருவருக்கு ஒரு சமயத்தில் அழகில்லாமல் தெரிவது, மற்றொரு வேளையில் அழகாக இருப்பதாக தெரியலாம். அழகு நிரந்தரம் இல்லாதது. ஒருவரின் மன ஓட்டத்தின் (mood) தன்மைக்கு ஏற்றவாறு அது மாறுபடுகிறது.


பணம் அவசியமா?

இன்றைய காலகட்டத்தில், ஓரளவுக்காவது பணம் அவசியமே.


கடவுள் உண்டா?

உண்டு. அதை அனுபவித்தவன் என்ற முறையில் இதனை கூறுகிறேன்.


அழகு,காதல்,பணம், கடவுள்?

கேள்வியே புரியவில்லை.

Friday, September 11, 2009

Wrath of The Lord?


This is what was reported on August 29, 2009:

"The TDP president alleged that after SEZs, lands and irrigation projects, the administration has now set its eyes on the temple properties and strongly denounced the Chief Minister''s indifference on the whole issue, saying the case of missing jewellery is only one part of the whole story. He said the chief minister would face the wrath of Lord Venkateswara for remaining indifferent towards Tirumala, the Lord''s abode. "Lord Venkateswara (Lord Balaji) is very powerful. This is a proven historical fact. Such people will pay a heavy price in the long run," Naidu said."

On the morning of 2nd September, 2009, just five days later, the CM of AP, who left on the state helicopter for an official trip, went missing within an hour. After the biggest and longest ever manhunt in the history of India, just the fuselage of the state's helicopter and the remains of five bodies were found on the Nallmalla forest hills.

The officials and experts subsequently re-constructed what would have happened after the CM forced the pilots to proceed with his planned trip inspite of warnings about bad weather along the route.

1. Due to bad weather, the helicopter must have encoutered high turbulence, severe lightning sotrms and heavy rains forcing the pilot to fly in space at low heights, which are well below safe levels.
2. Due to heavy winds, lightning & thunder storms, all electronic systems in the copter failed and the pilot was forced to rely on eye-sight alone.
3. Heavy rains obfuscates the pilots' vision forcing him to deviate from the flight path and towards east, where lies the hills of Eastern Ghats in the Nallamalla forest range.
4. Within minutes, the helicopter must have encountered a cliff, directly flew into it and got smashed into pieces. Immediately upon the impact, the helicopter must have exploded & caught fire. Whatever or whoever inside it must have got incinerated inside that fireball.
5. Whatever was left of the helicopter and the people inside it, like its fesuelage or some human body parts, must have fallen onto the earth & lying there unattended & uncared for under the beating rains & winds for 24 hours till the search & rescue teams sighted them.

The gory photographs of the wreckage shows how much shattering and battering the helicopter must have borne during its ill-fated flight. If one carefully observes the happenings, it seems as though ALL FIVE ELEMENTS OF THE NATURE have teamed up to wreck that flight. The only human trigger for the mishap came from the CM himself - his adamant stand of not wanting to postpone his official engagement that day in spite of the warning about bad weather for flying.

Is that what is called the Wrath of God?

Tuesday, September 1, 2009

ராவண ரசிகன்



"நான் ராவணனின் பரம ரசிகன். அது ஏன் என்பது உங்களுக்குத் தெரியும்." (இங்கே சுட்டவும்)

பேஷா தெரியுமே!! ரெண்டு பேருமே இன்னொருத்தன் பொண்டாட்டி மேல் ஆசை வெச்சவங்க!!! Great Men Think Alike (?)

"தமிழக மக்கள் ஹீரோவையும் ரசிப்பார்கள். ஆண்ட்டி ஹீரோவையும் ரசிப்பார்கள்."

ஒ! அதான் கௌதமி ஆன்டி யின் (இன்றைய) ஹீரோவையும் ரசிக்கராங்களா சில பேர்?

Sunday, August 16, 2009

"Khan" Banega Crorepati

We are witnessing the Mother of All Reality Shows.

The Secularists are back with a Bang!!! That too when the opportunity is presented by none other than "King" Khan, how can the "secular" media fritter it away?

The 'incident' that made our secularists go hammer & tong for "individual liberty" is this. Whether it is electronic media or print media or the secular politicians, nobody missed the opportunity to showcase their "secular" credentials for yet another time.

Stopping a tourist for routine checking happens all over the world and it is the prerogative of any country to do the checking/verification/frisking, as it deems fit. The only exception being people who come under diplomatic or protocol immunity - like the Heads of States and Governments.

When it comes to America or other Western nations, they first define the process & make sure there are no exceptions except as aforesaid. In India the situation is entirely different. The only people who are subjected to all checks are the ordinary people, who nevertheless are willing to undergo the same, having been the main victims of terrorism or have seen live acts of terrorism through irresponsible media. But, our security processes or systems have more exceptions to them than what has been prescribed, Yes, many people in politics or adminstration, or close to either of the beasts, though not eligible, get VIP or VVIP treatment, even at the hands of security personnel, which is very bad.

And this kind of VIP treatment is what has cultivated the "Ego-maniacs" like Shah Rukh Khan. SRK, who is used to getting VIP treatment at the hands of Indian security agenices, by being exempted from frisking & other routine security measures, is now "shocked" that he was held up in an American airport for, hold your breadth, "two hours" for questioning. It has subsequently been clarified that out of these "two hours", SRK had to wait "more than an hour" for the arrival of his baggage.

Though "secular media" and "secular politicians" are happy to jump to the "rescue" of SR "Khan" so that they can get super TRP ratings as well as get into public limelight, there are so many other people like this man, who are also in public limelight and who also undergo such routine check-ups at airports all across the world but they have never made any fuss about these things, which are happening routinely.

So, why is all this fuss created now by SRK for a routine check-up? Knowing all these Bollywooders, they generally don't miss an opportunity to promote their movies. Do you remember how BCCI reacted angrily to SRK appearing at a cricket stadium when an ODI or T20 match was being played a couple of years back, just because it happened to be held on the eve of a SRK movie's release? SRK also unabshedly used that opportunity of live TV coverage and the crowd's excitement whenever his face was shown on the stadium's big screen.

Could it be for a similar reason why SRK is now "playing up" his "detention"(?) at an American airport, alleging that the detention is due to his surname ending with "Khan". I have very strong suspicion that SRK, the businessman, is at play here. Obviously, SRK might not have expected that he will be detained in an American airport like this since he must be a frequent traveller & also a famous Bollywood icon, known well internationally in recent years. In fact, he even recently attended a shooting of his "movie-under-production" in different US cities. But, having been detained unexpectedly, the businessman in SRK, must have found it "an opportunity not to be lost foolishly".

So, the actor-cum-producer SRK, utilised his detention and the consequent media attention & public reaction to the hilt & started playing up the "Khan" part more and more. Though the US Immigration officials have swiftly denied that criticism and said it is a routine check-up done for every tourist to the country, neither the media nor SRK are willing to let go the opportunity, it seems.

Media, particularly of the "secular" variety, in India, has been starved of a "Muslim victim" at the hands of the "Imperialist" Americans, for a long long time. Particularly after the 26/11 Mumbai attacks of last year, the 'media shenanigans' have acquired a public despise to such levels that the "secular media" was in hiding & was afraid to come out so openly and blatantly, lest they will be mistaken by the public to be abetting Pakistan's objectives. Even though a recent news came out & rocked the Indian Parliament that India's Former President and a Decent Human Being, Dr. A.P.J. Abdul Kalam, was frisked by an American Airline in contravention of Diplomatic Protocol for which the airline duly apologised, the "secular media" could do nothing - yes they simply could not whip up anti-Muslim fervour like they are doing now - since Dr. Kalam, DIDN'T MAKE ANY FUSS ABOUT THE INCIDENT, neither when it happened a few months before nor when the matter came out in public now. A truely decent human being that he is, Dr. Kalam, took this matter in his stride and EVEN SUBJECTED HIMSELF TO THE FRISKING BUT NEVER MADE ANY FUSS ABOUT IT. So, he did not give our "secular media" any opportunity to play their favourite game.

Compare the behaviour of Dr. Kalam, who has the Diplomatic Right NOT TO BE FRISKED but subjected himself voluntarily without any fuss when he was asked to be frisked by an American airline with that of an "Ego-manical Bollywood actor" SRK, who DOES NOT ENJOY ANY DIPLOMATIC IMMUNITY LIKE DR. KALAM, and hence had to undergo check-ups like any other ordinary citizens, IS MAKING A BIG HUGH & CRY ABOUT IT now & all our "secular media" has news only about it for the last two days.

Many people may not know what is the reason for SRK to rake up the issue like this, when he must be aware that, though he is a known and popular international figure he is not immune from any checking at immigration. But, like I suspect, general public will also start seeing through the game SRK, with the help of secular media, is playing now, once they realise one simple matter. That is, the name of the "film-under-production" in which SRK is acting & also co-producing along with famous director Karan Johar. The name of the movie-in-the-making is "My Name is Khan".

"My Name is Khan" (MNIK), I hear, is not the usual KJ type Punjabi "love-family melodrama-marriage-happy ending" movie. As the name suggests, the protagonist of MNIK is an Indian Muslim whose name ends with "Khan' and who suffers from a type of autism. The story happens in America. Because of his name & his inability to talk freely due to his neuro-disease, "Khan" gets into trouble & detained by authorities on "suspicion". Yes, the story, more or less, goes like the "actual" SRK-related story now coming out from America in the last two days.

So, now do you understand the "background" of this whole episode? With the help of media frenzy, SRK & KJ will be attempting to make a "financial killing" in USA & other Western markets through MNIK. There are huge NRIs and many non-NRIS, who will also be curious to know about this Indian actor, when MNIK is released by the end of the year or early next year now that SRK has become even more "famous'" with this episode. Now, all of us can look out for many more hours of sound-bytes from SRK, KJ and all Bollywooders worth their name, on this "SRK Detention" episode on our "secular media", to help promote SRK's next movie "My Name is Khan". What shameless creatures & cut-throat businessmen these sharks are? By whipping up anti-American fashion under the guise of a supposedly "anti-Muslim Americans " because his name ends with the name "Khan", which incidentally is also the theme of his forthcoming film, the businessman in SRK, has taken over the discourse.

Come on, India & NRIs, go ahead & get drenched in SRK-whipped "anti-American" frency & shell out dollars & rupees to watch his forthcoming "MNIK", which is now assured of atleast becoming a hit, if not a Super Hit, thanks to an innocuous American Immigration Officer, doing his routine duty of checking a tourist. For all you & I know, that American Immigration officer, may soon be getting a "bouquet" from an "unexpected" friend for the immense help & promotion he has done, albeit unknowingly.

Tuesday, August 11, 2009

மனிதருள் மாணிக்கமும், மனித உருவில் மிருகங்களும்


சமீபத்தில், டைரக்டர் ஷங்கர் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஈரம்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தலைமையில் நடந்தது. அதில், வழக்கம் போலவே தலைவர் தனது சூப்பரான பேச்சினால் அனைவரையும் கவர்ந்தார்.

அதில், வழக்கம் போலவே தமிழ் கலாச்சாரப்படி யார் தலைமையில் விழா நடக்கிறதோ, அவர்களை ஒரேயடியாக 'ஐஸ்' மழையில் நனைய வைத்து ஒரே தூக்காக தூக்கி விடுவதும் நடந்தது.

மனிதரில் மாணிக்கம் ரஜினி

அதில் ஒன்றுதான் தமிழ் திரைப்பட சங்கத்தின் தலைவர் ராம. நாராயணன் அவர்கள் பேசியது. அது இதோ:

"நமது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் கலைஞர்களிலே மிகச் சிறந்த நடிகர்… நடிகர்களிலே மிகச் சிறந்த மனிதர்… மனிதர்களிலே அவர் ஒரு மாணிக்கம்… இது அவருடன் பழகிய எல்லோரும் புரிந்து கொண்ட உண்மை. அவரால் நமது மண்ணுக்கே பெருமை".

'மனிதரில் மாணிக்கம்' - முன்னாள் பாரத பிரதமர் திரு. ஜவஹர்லால் நேரு அவர்களைத்தான் இந்த பட்ட பெயருடன் அழைப்பார்கள். இப்போது தலைவருக்கும் அதே பட்டப்பெயரையே திரு. ராம. நாராயணன் அவர்கள் அளித்திருக்கிறார்.

பொருத்தம்

For a change, இந்த பட்டப்பெயர், தலைவருக்கு மிகவும் பொருந்தி இருக்கிறது. வேறு முறையில் சொல்வதானால், இந்த பட்டப்பெயருக்கு இன்றைய கால கட்டத்தில் முழு முதல் தகுதி இருப்பது தலைவருக்கு மட்டும்தான். அதற்கு தன்னை முழுவதும் அவர் தகுதி ஆக்கி கொண்டுவிட்டார். எப்படி என்று கேட்பவர்களுக்கு விடையும்,அந்த விழாவிலேயே கிடைத்து விட்டது.

அப்ரூவர்

தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திரு. கலைபுலி ஜி. சேகரன் பேசியதில் முக்கியமானது இது:

''நம் அன்பு அண்ணன் சூப்பர் ஸ்டார் அவர்கள் எப்போதும் தயாரிப்பாளர்கள் -விநியோகஸ்தர்களின் பக்கம் நிற்பவர். அந்த நல்ல மனசு அவருக்கு இருப்பதாலேயே, கடந்த முறை நாங்கள் குசேலனை வாங்கியபோது, ஒரு முறைக்கு இரு முறை, 'பார்த்து விலைகொடுங்க… அதிகமா கொடுத்துடாதீங்க’ என விநியோகஸ்தர்களையெல்லாம் அவர் எச்சரித்தார்.

அதையும் தாண்டி, சில பேராசைக்காரர்களின் சூழ்ச்சியால் நாங்கள் அதிக விலை கொடுக்க வேண்டிய சூழல். ஆனால் நமது சூப்பர் ஸ்டார், தானே முன்நின்று இந்தப் பிரச்சினையை தீர்த்து வைத்தார். அவரது நல்ல மனசைப் புரிந்து கொண்டு நாமும் அவருக்கு ஒத்துழைத்தோம். இவரால் யாருக்குமே நஷ்டம் வராது… வர விட மாட்டார் என்பதற்கு இது ஒரு சான்று…". Sabaash, now, the cat is out of the bag.

குசேலன் பிரச்னையின்போது மற்றொரு மீடியா பொய்யும் வெட்ட வெளிச்சமானது. அப்போது போர்க்கொடி தூக்கி இருந்த விநியோகஸ்தர்கள் அனைவரும், 'பாபா' படத்தின்போது தாங்கள் லாபம் கண்டதாக நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். அதற்கும் ரஜினியே காரணம் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

மீடியாவின் கொலைவெறி

'குசேலன்' பட வெளியீட்டின்போது ரஜினியின் 'கேட்காத மன்னிப்பை' காரணம் காட்டி, அப்படத்தை ஓடவிடாமல் பிரச்சாரம் செய்து விட்டு அதனால் விநியோகஸ்தர்களும், திரை அரங்கங்களும் அதிக விலை கொடுத்து நஷ்டம் அடைந்து விட்டனர் என்று எப்படி எல்லாம் பிரச்சாரம் செய்தனர்? ஞானிகளும், சாணிகளும் ரஜினி என்ற மனிதரை எப்படி எல்லாம் சேற்றை வாரி தூற்றினர்? 'சன்'களும், 'விகடன்'களும் எப்படி எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு ஏதோ அவர்களுடைய கைக்காசை போட்டு குசலனை வாங்கி நஷ்டம் அடைந்ததை போன்று ஓலமிட்டன? 'ரஜினி'யை பற்றி எப்படி தேவையே இல்லாமல் 'சர்வே' எல்லாம் நடத்தி அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு சரிந்துவிட்டது போன்ற தோற்றம் உண்டாக்க முயற்சித்தனர்?

இப்போது, 'ஈரம்' பட இசை வெளியீட்டு விழாவில், ஒரு விநியோகஸ்தர் 'வாக்குமூலம்' கொடுத்து 'அப்ரூவர்' ஆக மாறிவிட்டாரே, இப்போது இந்த ஞானிகளும், சாணிகளும், 'சன்'களும், 'விகடன்'களும் எங்கே போய் தங்கள் முகத்தை காட்டுவார்கள்?

வாக்குமூலம் இப்போது தெளிவாக்கி இருப்பது இதைத்தான்:

ரஜினியின் எச்சரிக்கை

1. தான் 'கவுரவ' வேடத்தில் நடித்த குசேலன் படத்தின் வியாபாரத்தின்போதே, ரஜினியே விநியோகஸ்தர்களிடம் "அதிகமா விலை கொடுத்துடாதீங்க' என்று எச்சரித்திருக்கிறார். "பேராசைக்காரர்களான" விநியோகஸ்தர்களின் காதில் ரஜினியின் எச்சரிக்கை "செவிடன் காதில் ஊதிய சங்கு" போல் ஆனது.

பேராசை

2. "பேராசைக்காரர்களான" குசேலன் தயாரிப்பாளர்கள், ரஜினியின் எச்சரிக்கையை மீறி, குசேலன் ஒரு முழு மூச்சான ரஜினி படம் என்பது போல், சீன் காட்டி, அதனை பல கோடி ரூபாய்களுக்கு மொத்தமாக "பிரமிட் சாய்மீரா" என்ற குழுமத்திற்கு விற்று விட்டனர்.

காற்றோட போச்சு

3. 'பிரமிட்' குழுமம் தான் வாங்கிய வானளாவிய தொகைக்குமேல் குசேலன் படத்தை விற்றால்தான் லாபம் பார்க்க முடியும் என்ற நிலைமையில், அதனை மிக அதிக தொகைக்கு எல்லா ஏரியாக்களிலும் விற்றது. வாங்கிய விநியோகஸ்தர்களும், முதல் பாராவில் கூறியபடி ரஜினியின் எச்சரிக்கையை காதில் வாங்காமல், காற்றில் விட்டுவிட்டு பின்பு அவஸ்தை பட்டனர்.

மீடியாவின் வெறியாட்டம்

4. குசேலன் படமும் வெளியாகி, ரஜினி கன்னட வெறியர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டார் என்ற பொய் பிரசாரத்தில் சிக்கி, ரசிகர்களையும் சிறிது தடுமாற வைத்து விட்டது. இதனை சாக்காக வைத்து, தமிழ் மீடியாவுடன் சேர்ந்துகொண்டு விநியோகஸ்தர்கள் குசேலனுக்கு எதிராக கொடி பிடிக்க தொடங்கினர்.

ஞானி சாணியான கதை

5. "எதுடா சாக்கு, ரஜினியை பலி கடா ஆக்கலாம்" என்று காத்திருந்த ஞானிகளுக்கும், சானிகளுக்கும், 'வெறும் வாய்க்கு அவல்' கிடைத்தது போல் ஆயிற்று. ரஜினியையும், குசேலனையும் அதன் வியாபாரத்தையும் போட்டு கண்டபடி தாக்கினர் - உண்மை என்ன என்று தெரியாமலேயே அல்லது தெரிந்துகொள்ள விரும்பாமலேயே.

குசேலன் பிரச்னை உலகின் மிகப்பெரிய பிரச்னை

6. மீடியாக்கள் செய்த அட்டகாசத்தால், அப்போது தமிழ்நாட்டில் வேறு பிரச்னைகளே இல்லாதது போன்ற ஒரு தோற்றம் உருவாயிற்று. அமெரிக்காவுக்கும், உலகத்திற்கும், 160 ஆண்டுகள் வியாபாரம் செய்து ஒரே ஆண்டில் ஓட்டாண்டி ஆன "Lehmann Brothers" திவால் ஆனது பெரிய செய்தி ஆக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டு மீடியாவுக்கோ ரஜினியும், அவர் கேட்காத மன்னிப்பும் மற்றும் குசேலன் படம் அதிக விலைக்கு வியாபாரம் ஆனதும் அதனால் விநியோகஸ்தர்கள் சிலர் நஷ்டம் அடைந்ததும்தான் செய்தி. 'ரஜினி' என்ற மந்திர சொல் பத்திரிகை வியாபாரத்திற்கு பயன்படுவதுபோல், திரைதுரைக்கே பயன்பட்டிருக்காதோ என்று என்ன தோன்றுகிறது.

கல்நெஞ்சம்

7. வெளி உலகத்திற்கு வேண்டுமானால் ரஜினி கூறியதற்கு மாறாக மற்ற அனைவரும் குசேலன் வியாபாரத்தில் செயல்பட்டனர் என்று தெரியாமல் இருக்கலாம். அனால், சம்பந்தப்பட்ட அனைவரும் இதனை அறிந்திருந்தும், அதனால் பயன் அடைந்திருந்தும்கூட, ஒருவரும் "இதில ரஜினிக்கு சம்பந்தம் இல்லை;அப்படியே இருந்திருந்தாலும், அவர் சொன்னபடி நாங்கள் செய்திருந்தால் இந்த நிலைமையே வந்திருக்காது" என்று கூறவே இல்லையே. என்னே கல்நெஞ்சுக்காரர்கள்?

உண்மையான ஞானி இதோ

8. தமிழ் மீடியாக்கள் தன்னை ஏதோ கொலை குற்றம் புரிந்தவன் போல் சித்தரித்திருந்தாலும் கூட, இதனால் நன்மை அடைந்தவர்கள் ஒருவரும் உண்மையை உலகத்திற்கு தெளிவாக்காவிட்டாலும்கூட, ரஜினி என்ற அந்த மாமனிதன் தானே முன்னின்று, தன்னுடைய அறிவுரையை நிராகரித்துவிட்டு வம்பில் மாட்டிக்கொண்ட விநியோகஸ்தர்களை ஒரு தாயை போல அரவணைக்க முற்பட்டு, தனக்கு இதில சம்பந்தம் இல்லாவிடினும்கூட, அவர்களின் நஷ்டத்தில் ஒருபகுதியை தானே ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு கோடிக்கணக்கில் கொட்டிகொடுத்தபின்புதான், ஓநாய்களின் ஓலம் அடங்கியது.

இதைபோன்ற செயல்கள்தான், ஒருவனை மனிதன் என்ற நிலையிலிருந்து 'மாமனிதன்' என்ற அந்தஸ்திற்கு கொண்டு சேர்க்கிறது.

Supremely Self-Confident

ரஜினியை தவிர, வேறு யார் தன்னுடைய படத்தையே அதிக விலை கொடுத்து வாங்காதே என்று முன்கூட்டியே எச்சரிப்பார்கள்? அவனவன், வந்த வரைக்கும் லாபம் என்று சுருட்டிக்கொண்டு ஓடியிருப்பான். அவங்களுக்கு படம் விற்று போனதே பெரிய சாதனை, இதில எங்கே அதிக விலை கொடுத்து வாங்காதே என்றெல்லாம் சொல்வது?

மேலான நிலை

ரஜினியைதவிர வேறு யார் இவ்வாறு தன் பெயர், தான் செய்யாத தவறினால் கெடுக்கப்படும்போதும் பார்த்துக்கொண்டு மெளனமாக இருப்பார்கள்? உடனே, சம்பந்தப்பட்டவர்களை போட்டு காய்ச்சி எடுத்து, தன் பேரை மட்டும் 'ரிப்பேர்' செய்துகொண்டு இருக்க மாட்டார்களா? ரஜினி மட்டுமே, தன் பேரை காவு கொடுத்தாவது தான் மதிப்பவர்கள் பெயர் மாசுபடாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய உள்ளம் படைத்தவர். அதனால்தான், அந்த 'மாமனிதன்' தமிழ் மீடியாவின் தரம் குறைந்த விளையாட்டுக்கு ஒரு பதிலும் கொடுக்காமல் மௌனம் காத்து, மற்றவர் மானம் காத்தான்.

கலியுக கர்ணன் இதோ

ரஜினியை தவிர வேறு யார், தன்னுடைய கைகாசை போட்டு, விநியோகஸ்தர்களின் நஷ்டத்தை ஈடு கட்டி இருப்பார்? மற்ற அனைவரும், மீடியாவின் ஆட்டத்தால், 'துண்ட காணோம், துணிய காணோம்' என்று ஓட்டம் அல்லவா எடுத்திருப்பர்?

மனமே பிரதானம்

இப்போது சொல்லுங்கள், திரு. ராம. நாராயணன் கூறியபடி, ரஜினி என்பவர், "மனிதருள் மாணிக்கம்" என்ற பட்டத்திற்கு தகுதியானவர்தான் இல்லையா? மேலும், மேலும் பணமே பிரதானம் என்று வாழ்க்கையை ஓட்டும் மனிதர்கள் நிரம்பிய இக்காலத்தில், 'மனத்திற்கு' மட்டுமே பிரதான இடம் கொடுத்து, 'பணத்தை' துச்சமாக மதிக்கும் மனிதனுக்கே 'மனிதருள் மாணிக்கம்' என்ற பட்டம் மிகவும் பொருத்தம்.

மனித உருவில் மிருகங்கள்

இப்படிப்பட்ட மனிதர்களையும் கூட, மொழி மற்றும் மற்ற பிராந்திய வேறுபாட்டால் பிரித்து பார்க்க துடிக்கும் மனிதர்களையும், கல் நெஞ்சக்காரர்களையும் "மனித உருவில் உலவும் மிருகங்கள்" என்று சொன்னால் தவறில்லைதானே? (உண்மையான) மிருகங்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

Sunday, August 9, 2009

Apple - The SUPERSTAR (Rajinikant) of World Cellphone Industry

Apple, who is a recent entrant to the World Cellphone Industry with its iconic iPhone, which was launched in June, 2007, is shining like the Superstar Rajinikant. Apple, which is primarily a computer (both hardware & software) company, has 6% share of computer industry's revenues but controls 25% of opeating profits of the industry. But, when it comes to its foray into the cellphone industry, it is shining like the Superstar Rajinikant.

Consider the following statistics, based on the performance in the first half of 2009:

Apple's iPhone unit marketshare in cellphone industry - 2%

Apple's share of handset revenues (sales value) in cellphone industry - 8%

Apple's share of handset operating profits in cellphone industry - 32%

Cellphone industry's average operating margin - 7.5%

Apple's operating margin from iPhone sales - 40%

As per the recent estimations, Apple's latest iPhone model - iPhone 3GS - is supposed to have a operating margin of nearly 60% for its top-end 32 GB model.

iPhone 3GS which was launched in mid-June, 2009, has been selling hot & Apple is unable to meet the demand and hence is postponing the launch of its latest model in several countries.

The above statistics of Apple's share in cellphone industry's operating profits is bound to improve further once the 3rd calendar quarter numbers unfold.

Superstar Rajinikant is also sitting pretty in the movie industry like Apple is doing in cellphone industry.

Rajinikant acts in a South Asian regional language called Tamil.

He acts in 1 movie every 2 or 3 years.

His movies generate revenues several times its cost. (Chandramukhi (2005) produced at a cost of about Rs. 8 crores, generated BO collections in excess of Rs. 110 crores. Sivaji - The BOSS (2007) which costed around Rs. 60 crore, generated BO collections in excess of Rs. 250 crore).

His movies give the maximum rate of profit to its stake-holders like producers, distributors and the exhibitors.

Hailing & practicing in a regional language film industry, Rajinikant, today is rumoured to be the highest paid non-Hollywood actor in the world, even surpassing Jackie Chan. (For Sivaji, he is rumoured to have ben paid Rs. 17 crore as fee plus a share in profits).

So, now read the headline once again, please.

Friday, July 31, 2009

எப்பிடி இருந்த நீ இப்பிடி ஆயிட்டியே !!! (Updated)


ஒரு காலத்திலே ரஜினிக்கு போட்டியாக உன் படங்கள் வெளியாகிகொண்டு இருந்தன. சில சமயம் உன் படங்கள் வசூலில் ரஜினி படங்களை மிஞ்சவும் செய்தன.

ஆனால், தொன்னூறுகளில் இருந்து உன் படங்களால் ரஜினி படங்களின் ஆதிக்கத்தை தாக்கு பிடிக்க முடியவில்லை. இருப்பினும், அவ்வப்போது, "தேவர் மகன்" போன்று சில படங்கள் வசூலில் குறை வைக்காமல் பரிமளித்தன. "ஆளவந்தான்", "ஹே ராம்" போன்று ஒரு சில படங்களால் உன்னால் மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்க முடிந்தது - படம் வெளியாவதற்கு முன்னால். வெளியானபின்பு, அப்படங்கள் பப்படங்கள் ஆனது ஒரு தனிக்கதை.

"உலக நாயகன்" என்று உன்னை உன் ரசிகர்கள் (?) அழைத்தாலும், உண்மையில் உன் பெயரும், புகழும் எந்த அளவிற்கு உலகம் முழுக்க பரவி இருக்கிறது என்பதற்கு, நீ "பஞ்ச தந்திரம்" படத்திற்காக கனடா மற்றும் அமெரிக்க நாட்டிற்கு போனபொழுது உன் பெயரை பார்த்துவிட்டு அவர்கள் உன்னை விமான நிலையத்தில் வைத்து அலைக்கழித்ததே நல்ல சாட்சி. ஒவ்வொருவருக்கும் நீயே உன்னைப்பற்றி எடுத்து கூறியும், உன் பயோடேட்டாவை காட்டியும்கூட அங்குள்ள வெளிநாட்டவர் ஒருவருக்கும் உன்னை பற்றிதெரியாமல், கடைசியில் இந்திய வெளியுறவு அலுவலக அதிகாரிகள் நேரில் வந்து உன்னை மீட்டெடுக்க வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட "உலகம் அறியா நாயகன்" நீ என்ற உண்மையை உலகம் அன்று உணர்ந்தது.

தமிழ் பட துறையில், மற்ற பட துறைகளை போலவே, மார்க்கெட் நிலவரம்தான் ஒரு நடிகரின் சம்பளத்தை நிர்ணயிக்கும் என்ற அடிப்படையில், உன்னுடைய மிக பெரிய வெற்றிப்படம் என்று சொல்லிக்கொள்ளும் "தசாவதாரம்" படம் வெளிவந்த பின்பும் கூட நீ சம்பள அடிபடையில் ரஜினி (Always Numero uno) மற்றும் அஜித் (Distant Second) இருவருக்கும் பிறகு தொலைவில் மூன்றாவதாகத்தான் (Very Distant Third) வர முடிந்திருக்கிறது. இதிலிருந்தே தெரிகிறதே, உன்னுடைய மார்கெட்டின் உண்மையான லட்சணம். சந்தை என்பது கருணை இல்லாதது. Market is merciless, isn't it?

இப்படியாகத்தானே, ஒரு காலத்தில் முதல் இடத்திற்கு ரஜினியுடன் போட்டியிட்ட நீ, படிப்படியாக கீழிறங்கி இப்போது விக்ரம் போன்ற நடிகர்களின் படங்களுடன் போட்டியிடுவதற்கே யோசிக்கும் நிலைக்கு தள்ளபட்டுவிட்டாயே என்பதை நினைத்தால் மிகவும் பாவமாக இருக்கிறது. இந்த செய்தி "ஹிந்து" பத்திரிகையில் இப்போது வெளி வந்திருக்கிறது. உன்னுடைய "உன்னை போல் ஒருவன்" திரைப்படம், விக்ரமின் "கந்தசாமி" திரைப்படத்துடன் மோதுவதற்கு பயந்துகொண்டு, செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுவிட்டது.

உன்னுடைய ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முதலில் உன்னுடைய ஐம்பதாண்டு கால திரை துறை வாழ்வினை குறிக்கும் விதமாக ஆகஸ்ட் பன்னிரண்டாம் தேதி வெளியிடுவதாக இருந்த உன்னுடைய "உன்னை போல் ஒருவன்" திரைப்படம், இப்போது உன்னிலும் மார்க்கெட் நிலவரத்தில் கீழாக இருக்கும் விக்ரம் போன்ற நடிகர்களின் திரைபடத்துடன்கூட மோதுவதற்கு ஏன் பயப்பட வேண்டும்? இது உணர்த்துவது என்னவென்றால் உனக்கே உன்னுடைய படத்தின்மேல் நம்பிக்கை இல்லை என்பதுதான். மேலும், "கந்தசாமி" படத்தின் தயாரிப்பாளரான "கலைப்புலி" தாணு, உன்னால் மிகவும் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களில் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட "ஆளவந்தான்" தயாரிப்பாளர் என்பதனால், உன்னுடைய படத்தை விசேஷமாக தோற்கடிக்க ஏதாவது செய்து உன்னை சரியாக பழிதீர்த்துக்கொண்டு விடுவாரோ என்றும் பயமோ?

எது எப்படி இருப்பினும், இந்த செய்தியை படித்தவுடன் எனக்கு தோன்றிய நினைப்புதான் "எப்பிடி இருந்த நீ இப்பிடி ஆயிட்டியே!".

கமல் ரசிகர்களை மேலும் வெறுப்பேற்றும் செய்தி:

இந்த வார்த்தையை சுட்டினால் 'கந்தசாமி' படமும், அதன் நாயகன் 'விக்ரமும்', மற்றும் அதன் தயாரிப்பாளர் 'கலைப்புலி' தாணுவும், கமலையும், அவர் ரசிகர்களையும் படுத்தும் பாடு உங்களுக்கு விளங்கும். கந்தசாமியின் ஆகஸ்ட் மாத வெளியீட்டால், கமலின் . போ. . வுக்கு (அதாங்க, உன்னை போல் ஒருவன் படம்) அடுத்த இரண்டு மாதங்களுக்கு தியேட்டர் கிடைக்காது போலிருக்கிறது. கந்தசாமி படம் மட்டும் வெற்றி அடைந்துவிட்டால், . போ. . தீபாவளிக்கு முன்பு ரிலீஸ் செய்யப்படுவது ரொம்ப கஷ்டம். பார்ப்போம். 'தசாவதாரம்' வெற்றிப்படம் என்று சொல்லப்பட்ட அதன் நாயகனின் அடுத்த படமே தியேட்டர் கிடைக்காமல் திண்டாடுவது என்பது அந்த 'நாயகனின்' மார்க்கெட் நிலவரத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

பின்குறிப்பு: இந்த பதிவை படிப்பவர்கள், கண்டிப்பாக பின்னூட்டங்களையும் (comments) படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.